மர்ம முறையில் மர்ம உறுப்பு அறுக்கப்பட்டு வாலிபர் கொடூர கொலை.. காரணம் கேட்டுக்கு அதிர்ந்து போன..??

கள்ளக்காதலியை கைவிட மறுத்ததால், இளைஞரின் மர்ம உறுப்பு அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மர்ம முறையில் மர்ம உறுப்பு அறுக்கப்பட்டு வாலிபர் கொடூர கொலை.. காரணம் கேட்டுக்கு அதிர்ந்து போன..??

சென்னை வேளச்சேரியை அடுத்த ஜல்லடியன்பேட்டை நெசவாளர் நகர் வைத்தியலிங்கம் தெருவை சேர்ந்தவர் நரேஷ் (29). இவர் ஏசி மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை...

நேற்று முன்தினம் வழக்கம் போல் காலை வேலைக்கு சென்ற நரேஷ்.. இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.. இதனால், பதறிப்போன பெற்றோர்கள், அவரது செல் போனுக்கு கால் செய்து செய்தனர். ஆனால், அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து உறவினர்கள் வீடு, நண்பர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். நீண்ட நேரம் தேடியும் அவர் கிடைக்கவில்லை.. அதனால், பெற்றோர்கள் தனது மகனை காணவில்லை என போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், பள்ளிக்கரணை அடுத்த ஜல்லடியன்பேட்டை ஏரிக்கரை பகுதியில் அடையாள தெரியாத நபர் ஒருவர் சடலமாக கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், அவரது மர்ம உறுப்பு உட்பட பல இடங்களில் பலத்த வெட்டுக்காயம் இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் காணாமல் போன நரேஷ் என்பது தெரியவந்தது. மேலும் இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், நரேஷுக்கும் அதே பகுதியை சேர்ந்த அருண் பாண்டியன் (28) என்பவரின் மனைவிக்கும் கடந்த ஒரு வருடமாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

இது பற்றி கணவர் அருண் பாண்டியனுக்கு தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து அருண் பாண்டியன் பலமுறை நரேஷை கண்டித்துள்ளார். ஆனால், அவர் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அருண்பாண்டியன் தனது நண்பர்களுடன் சேர்ந்து நரேஷை கடத்தி சென்று மர்ம உறுப்பை அறுத்து கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது. இதைதொடர்ந்த்து போலீசார் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், அருண்பாண்டியன் மற்றும் அவரது நண்பர்கள் சஞ்ஜய் (27), அருண் (27), திலீப் (எ), அஜித் (27) ஆகியோர் நேற்று மாலை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.