சைக்கிளை நைசாக திருடி சென்ற மர்ம நபர்...

தென்காசி மாவட்டத்தில், மர்ம நபர் ஒருவர் சைக்கிளை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

சைக்கிளை நைசாக திருடி சென்ற மர்ம நபர்...

தென்காசி | சங்கரன்கோவில் உள்ள பாரதி நகர் நெசவாளர் காலனி நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நெசவுத்தொழில் செய்பவர்கள் அதிக அளவில் காணப்படுகின்றனர். இவர்கள் தங்களின் தொழிலுக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்வதற்கு சைக்கிளையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் பெரும்பாலான ஊழியர்கள் கூலித் தொழிலாளர்களாக இருப்பதால்  அவர்களிடம் சைக்கிளையே அதிக அளவு பயன்படுத்துகின்றனர்  இந்த நிலையில் சங்கரன்கோவில் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த நிதிஷ்குமார் என்பவர் ஹார்டுவேர் கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் பணி சம்பந்தமாக சென்று வருவதற்கு சைக்கிளை பயன்படுத்தி வந்துள்ளார்.

மேலும் படிக்க | தாய் கண் முன்னே தந்தையை 14 இடங்களில் வெட்டிக் கொலை செய்த மகன்!

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் உணவு வேளையின் போது வீட்டின் முன் பக்கம் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் ஆட்கள் நடமாட்டத்தை நோட்டமிட்டு யாரும் இல்லாத நேரத்தில் நித்திஷ் குமார் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த சைக்கிளை நைசாக திருடிக் கொண்டு அங்கிருந்து செல்வது அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

மேலும்  அதே பகுதியில் குடியிருக்கும் சரஸ்வதி  என்பவர் குழந்தைகளுக்காக வாங்கிய சைக்கிளை வீட்டின் வெளியே நிறுத்தி வைத்துள்ளார். அதுவும் அன்றைய தினமே திருடு போய் உள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து நித்திஷ் குமார் சங்கரன்கோவில் தாலுக்கா காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளார்.

மேலும் படிக்க | சென்னையில் தஞ்சம் புகுந்த பெண்.... பாதுகாப்பு அளிப்பதாக உறுதி?!!

அங்கிருந்த காவலர்கள் புகார் ஏதும் பெறாமல் விசாரணை நடத்துவதாக  கூறியுள்ளனர்  திருட்டு சம்பவம் நடைபெற்று இரண்டு நாட்களாகியும் சைக்கிள் என்ற காரணத்தால் காவல்துறையினர் விசாரணை நடத்த அலட்சியம் காட்டுவதாக பாதிக்கப்பட்டவர் தரப்பில் குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | கோயில் உண்டியலை திருடிச் சென்ற மர்ம நபர்... சிசிடியாவால் கைது!!!