கடற்படைக் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை...போலீசார் விசாரணை!

கடற்படைக் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை...போலீசார் விசாரணை!

நாகப்பட்டினம் துறைமுக வளாகத்தில் கடற்படைக் காவலர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் துறைமுக வளாகத்தில் இந்திய கடற்படை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் காவலராகப் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த ராஜேஷ், இன்று அதிகாலை 4 மணிக்கு துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். துப்பாக்கி சத்தம் கேட்ட சக காவலர்கள் உள்ளே சென்று  பார்த்த போது ராஜேஷ் உயிரிழந்து கிடந்துள்ளார்.

இதையும் படிக்க : இன்று காலை 11 மணிக்கு...பிரதமரின் 100-வது ”மனதின் குரல்” நிகழ்ச்சி...ஐநாவில் நேரடி ஒலிபரப்பு!

பின்னர்  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகப்பட்டினம் நகர் காவல் நிலைய காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும், நாகையில் இந்திய கடற்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.