மனைவி நடத்தையில் சந்தேகம்: 13 இடங்களில் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய கணவனுக்கு வலைவீச்சு...

மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் 13 இடங்களில் கத்தியால் குத்தி தப்பிசென்ற கணவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மனைவி நடத்தையில் சந்தேகம்: 13 இடங்களில் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய கணவனுக்கு வலைவீச்சு...

சென்னை ராதாகிருஷ்ணபுரம் சுந்தரம் சாலை பகுதியை சேர்ந்த சைக்கோ அஜித் என்பவருக்கு திருமண ஆகி ஆஷா என்ற மனைவியும் உள்ளார்.போதைப் பழக்கத்திற்கு அடிமையான அஜித்-துக்கு போதை மாத்திரை உட்கொள்ளும் பழக்கம் இருந்து வந்துள்ளது. அவரின் மனைவி ஆஷாவிற்கு வேறு ஒருவருடன் தொடர்பு உள்ளாதாகவும், அவர் நடத்தையில் சந்தேகமடைந்து அஜித் அடிக்கடி ஆஷாவுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு மாத்திரை போதையில் வீட்டிற்கு வந்த அஜித் மனைவி ஆஷாவுடன் தகறாரில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றியதில் கோபமடைந்த அஜித் வீட்டிலிருந்த கத்தியால் ஆஷாவின் கை மற்றும் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

ஆஷா-வின் அலரல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து வெட்டுக் காயங்களுடன் இருந்த ஆஷாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடம் சென்ற அபிராமபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், மனைவியை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிய அஜித் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 தலைமறைவாக உள்ள  சைக்கோ அஜித் மீது ஏற்கனவே வழிப்பறி, மிரட்டிப் பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகளில் அபிராமபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று திரும்பி வந்தவர் என்பது குறிப்பிடதக்கது.