4 முறை தேசிய விருந்து வென்றவர்...தன்னை தானே மாய்த்து கொண்ட சோகம்!

4 முறை தேசிய விருந்து வென்றவர்...தன்னை தானே மாய்த்து கொண்ட சோகம்!

மகாராஷ்டிராவில் தூக்குபோட்டு தற்கொலை செய்த கலை இயக்குநர் நிதின் தேசாயின் ஸ்டுடியோவில் தடவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

பாலிவுட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கலை இயக்குனராக பணியாற்றி வரும் நிதின் தேசாய், தேவ்தாஸ், ஜோதா அக்பர், லகான், டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர், பாஜ்ராவ் மஸ்தானி உள்ளிட்ட ஐகானிக் படங்களில் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். கலை இயக்கத்திற்காக 4 முறை தேசிய விருதுபெற்ற நிதின், கஜ்ரட் பகுதியில் 52 ஏக்கர் பரப்பளவில் ஸ்டுடியோவை நிறுவி நடத்தி வந்தார்.

இதையும் படிக்க : பொதுப்பாடத் திட்டம்; விளக்கம் அளித்த அமைச்சர் பொன்முடி!

இந்நிலையில் இன்று தனது ஸ்டுடியோவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முதற்கட்ட விசாரணையில் கடன் பிரச்னையால் நிதின் அவதியுற்று வந்ததாக தெரியவந்தது. இதனையடுத்து தற்கொலை செய்துக்கொண்ட கலை இயக்குனர் நிதின் தேசாயின் ஸ்டுடியோவில், தடவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.