பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு வழக்கில் அதிகாரிகள் ஆஜர்  

பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மற்றும் முன்னாள் எஸ்பி கண்ணன் ஆகியோர்  விழுப்புரம் மாவட்ட  நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு வழக்கில் அதிகாரிகள் ஆஜர்   

பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மற்றும் முன்னாள் எஸ்பி கண்ணன் ஆகியோர்  விழுப்புரம் மாவட்ட  நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இந்த வழக்கை நடத்துவதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று ராஜேஸ்தாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விவாதம் நடைபெற்றது.   குற்றப்பத்திரிகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முதல் செங்கல்பட்டு மாவட்டம் வரை குற்றச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக வழக்கில் குறிப்பிட்டுள்ள நிலையில் இந்த நீதிமன்றம் இந்த வழக்கை நடத்தக்கூடாது என்றும உளுந்தூர்பேட்டையில் தான் நடத்த வேண்டும் என்று வாதிட்டார்.

அப்போது குறிக்கிட்ட நீதிபதி நீங்கள் குறிப்பிட்டதை போல் உளுந்தூர்பேட்டைக்கும் தலைமை நீதிமன்றம் இந்த சி.பி.சி.ஐ.டி போலிசார் தான் என்று தெரிவித்தார். பின்னர் இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி கோபிநாத் வழக்கை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.