கள்ளக்காதலன் கணவனை கொலை செய்வதை வீடியோ காலில் ரசித்த மனைவி...

தனது கள்ளக்காதலன் கொண்டு, கணவரை கழுத்தறுத்து கொலை செய்ததாகக் கூறப்ப்டும் மனைவி கொலையை வீடியோ காலில் ரசித்ததாகக் கூறப்படுகிறது.

கள்ளக்காதலன் கணவனை கொலை செய்வதை வீடியோ காலில் ரசித்த மனைவி...

திண்டுக்கல்: வேடசந்தூரையடுத்த சந்தைப்பேட்டையைச் சேர்ந்த 35 வயதான நவீன்குமாருக்கும், விஜயசாந்தி என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து முடிந்தது. ஒரு மகன், ஒரு மகள் என 2 பிள்ளைகள் பெற்ற இவர்களின் இல்லற வாழ்வில் திடீரென புயல் வீசத் தொடங்கியது. 

வேடசந்தூரில் உள்ள இரும்புக்கடையில் லோடுமேனாக வேலை பார்த்து வந்த நவீனுக்கு, சக ஊழியரான பழனிசாமி என்கிற சிவாவுடன் நட்பு உண்டானது. பழனிசாமி என்கிற சிவா லோடுமேனாக வேலை பார்த்ததுடன், குறிசொல்லும் சாமியாகராகவும் இருந்து வந்தார். இது அறிந்த நவீன்குமார் மனைவி விஜயசாந்தி தனக்கும் கெறி கேட்க விரும்பி, சிவாவிடம் சென்றிருக்கிறார்.

மேலும் படிக்க | திருமணமான பெண்ணுடன் தொடர்பில் இருந்த இளைஞர்...! அரிவாளால் தாக்கிய தந்தை...!

குறி கேட்க தொடங்கியது நட்பாக மாறி, இருவருக்கும் உறவு ஏற்பட்டிருக்கிறது. மேலும், கணவன் இல்லாத போது தனியாக சிவாவுடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அறிந்த கணவன் நவீன், இதனை கண்டித்து எச்சரித்திருக்கிறார். இருந்தும் அதனை மதிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

தனது மனைவி தனக்கு தெரிந்தே தகாத உறவில் இருந்ததை கண்டித்து தொடர்ந்து நவீன் மிரட்டி வந்ததாகக் கூறப்படும் நிலையில், அவரை கொலை செய்ய, பூசாரி சிவாவுடன் விஜயசாந்தி திட்டமிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க | நகை பட்டறையில் கொள்ளைப்போன 67 கிராம் தங்கம்...! சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு...!

இதற்காக பல நாட்கள் திட்டமிட்ட படி, நவீனை அழைத்துக் கொண்டு சிவா கோடாங்கிப்பட்டிக்கு அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்ற சிவா, நவீனுடன் சேர்ந்து மது அருந்தி போதை ஆனதும் நவீனின் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்திருக்கிறார்.

பயங்கரமான இண்டஹ் செயலை செய்ததும், தப்பி ஓடாமல், பொருமையாக த்னது காதலி விஜயசாந்திக்கு போன் செய்து தகவலை கூறியிருக்கிறார். நம்பாமல் இருந்த விஜயசாந்தி, அவர் பொய் கூறுவதாக பல முறை கூறியதால், வீடியோ கால் செய்து இறந்த நவீனைக் காட்டி நிரூபித்திருக்கிறார்.

மேலும் படிக்க | ரவுடியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள்...!

தான் நினைத்தது போலவே ஒரு வழியாக பிரச்சனை ஒழிந்தது என நினைத்து வீடியோ காலிலேயே துள்ளி குதித்ததாகக் கூறப்படுகிறது. கொலை செய்தது வெளிகாட்டாமல் இருவரும் அடுத்த நிமிடம் முதலே பழைய போல, எதுவுமே நடக்காதது போல அமைதியாகவே தங்களது இயல்பு வாழ்க்கையைத் தொடர்ந்திருக்கிறார்.

இறந்த நவீன் குறித்த தகவல் போலீஸ் அறிந்து, இன்று காலை, விஜயசாந்தியிடம் தகவல் தெரிவித்த போது, எதுவுமே அறியாதது போல கத்தி கூப்பாடு போட்டு அழுதிருக்கிறார் அவர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில், விஜயசாந்தி மீது சந்தேகித்த போலீசார், அவரை தீவிரமாக விசாரித்து உண்மையை வாங்கியுள்ளனர்.

மேலும் படிக்க | வடிவேலு காமெடி போல, ட்ரயல் வண்டியை அபேஸ் செய்த சம்பவம்...

தனது கணவரை, கள்ளக்காதலன் கொண்டு கொடூரமாக கொலை செய்ததோடு, அதனை வீடியோ காலில் ரசித்த வீஜயசாந்தி மீதும், சிவா மீதும் வழக்கு தொடரப்பட்டு இருவரும் கைதாகியுள்ளனர். இவர்களது தனிப்பட்ட விருப்பத்திற்காக, இரண்டு குழந்தைகளின் எதிர்காலம் இன்று கேள்வி குறியாகியிருக்கிறது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | இது ஒரு வழி பாதை... திரும்பி போக முடியாமல் ஒரேடியாக உயிரிழந்த ரவுடி...