சொத்துக்காக பிள்ளைகள் சண்டை போட்டதால் வேதனை... வயதான தம்பதிகளின் விபரீத முடிவு... 

சொத்துக்காக பெற்ற பிள்ளைகள் தொடர்ச்சியாக சண்டையிட்டதின் காரணமாக  முதிய தம்பதியினர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக்காக பிள்ளைகள் சண்டை போட்டதால் வேதனை... வயதான தம்பதிகளின் விபரீத முடிவு... 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் எரியோடு அருகே  உள்ள முக்கையகவுண்டனூர்  என்ற கிராமத்தில் வசித்துவந்த பொப்பனன்(75) வெள்ளையம்மாள் (70) ஆகிய  தம்பதிகளுக்கு அழகர்சாமி, முத்துச்சாமி இரண்டு மகன்களும் மணி, முத்தம்மாள் இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் அழகர்சாமி முத்துசாமி என்பவர் அதே ஊரில் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்கள். மணி மற்றும் முத்தம்மாள் ஆகியோரை குஜிலியம்பாறை அருகே திருமணம் செய்து கொடுத்து மருமகன் வீட்டில் இருந்து வருகிறார்கள்.

இதைத்தொடர்ந்து அழகர்சாமி, முத்துச்சாமி இரண்டு மகன்களும் தன்னுடைய தந்தை பொப்பனன்(75) தாய் வெள்ளையம்மாளிடம் சொத்து தகராறு காரணமாக அடிக்கடி சண்டை எழும்பியுள்ளது என கூறப்படுகிறது. இந்நிலையில் பெற்ற மகன்களால் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வருவதை  தாங்கிக்கொள்ள முடியாத தம்பதியினர்,  விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி மருந்தினை கலந்து குடித்து உறங்கி விட்டனர்.

மறுநாள் காலை வெகு நேரமாகியும் அவர்கள் வெளியே வராததால்,  அக்கம்பக்கத்தினர் சென்று பார்க்கும் போது, அங்கு அவர்கள் இருவரும் சடலமாக கிடந்துள்ளனர். இதைத் தொடர்ந்து எரியோடு காவல் துறையினரிடம் தகவல் கொடுத்ததின் பெயரில் சடலத்தை கைப்பற்றி, வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். சொத்து பிரச்சனை காரணமாக  பெற்ற பிள்ளைகள் கைவிட்டதால்  வயதான தம்பதியினர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.