பல்லடம் சோகம் உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு!

பல்லடம் சோகம் உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு!

பல்லடம் கள்ள கிணறு பகுதியில் படுகொலை செய்யப்பட்ட செந்தில் குமார் உள்ளிட்ட 4 பேரின் உடல்கள் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியை சோ்ந்த செந்தில்குமார், அவரது தாய், சகோதரர் மற்றும் சித்தி ஆகிய 4 பேரை மர்ம நபர்கள் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணையில், நெல்லையை சேர்ந்த வெங்கடேசன் என்பவர், கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

இதில் மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடல்களை வாங்க மாட்டோம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்நிலையில் மாவட்ட எஸ்.பி. சாமிநாதன் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளிகளை நெருங்கி விட்டோம் என்றும், விரைவில் கைது செய்வோம் என்றும் உறுதி அளித்தார்.

 

இதையடுத்து 4 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடல்களைக் கண்டு உறவினர்கள் கதறி அழுத காட்சி காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.

இதையும் படிக்க : "பாஜகவுக்கு இந்தியா என்ற சொல்லே பாஜகவிற்கு கசக்கிறது" மு.க.ஸ்டாலின்!