சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் : திருமணம் செய்த நபர்கள் தலைமறைவு!!

2 வேறு குடும்பத்தை சேர்ந்த பெற்றோர்கள் தங்களுடைய  சிறுவயது பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் : திருமணம் செய்த நபர்கள் தலைமறைவு!!

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம்  அருகே தத்தனூர் குடிக்காட்டை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் அதே கிராமத்தை சேர்ந்த பரமசிவம் - வேம்பு ஆகியோரின் 15 வயதேயான மகளை அவருடைய சம்மதமில்லாமல் பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில், கர்ப்பமான விஜயா ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு பரிசோதனைக்கு வந்தபோது விபரம் அறிந்த மருத்துவ அலுவலர்கள் இதுகுறித்து அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிக்கு தகவல் அளித்ததையடுத்து, ஜெயங் கொண்டம் மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். சிறுமியின் சம்மதமின்றி கட்டாய திருலுமணம் செய்து வைத்ததாக சிறுமியின் பெற்றோர் மற்றும் ராஜ்குமாரின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்தனர். இந்நிலையில் ராஜ்குமார் தலைமறைவாகிவிட்டார். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

இதேபோல் அதே கிராமத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவருக்கு பதினேழு வயது சிறுமியை திருமணம் செய்து வைத்ததாக ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் பெற்றோர்களான ரவி, ரேவதி மற்றும் ரஞ்சித்குமார் பெற்றோர்களான இளவரசன், சங்கீதா ஆகிய 4 பேர் மீது போலீசார்  வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ரஞ்சித்குமார் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.