பாதிரியார் பெனடிக் - சைபர் கிரைம் - நீதிமன்றத்தில் ஆஜர்!!!!

பாதிரியார் பெனடிக் - சைபர் கிரைம் -  நீதிமன்றத்தில் ஆஜர்!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாலியல் வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் பெனட்டிக் ஆன்றோ நீதிமன்ற காவல் இன்றுடன் முடிந்த நிலையில் சைபர் கிரைம் போலீசார் இன்று பாதிராயாரை நாகர்கோவில் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி மீண்டும் போலீசார் காவலில் எடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | கூலி உயர்வு: விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டம்


கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையை தலைமை இடமாகக் கொண்ட மலங்கரை கத்தோலிக்க சபையின் பாதிரியார் பெனிடிக் ஆன்றோ 30 வயதான இவர் பேச்சிப்பாறை,பிலாங்காவிளை ஆகிய இடங்களில் பாதிரியாராக பணியாற்றி வந்தார் இறுதியாக பணியாற்றிய பிலாங்காவிளை தேவாலயத்துக்கு வரும் இளம் பெண்களிடம் அவர்களின் சொந்த பிரச்சனைகள் தலையிட்டு அதற்காக அவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாச சாட்டிங் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக பேச்சிப்பாரையை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கடந்த மாதம் 19 ஆம் தேதி கைது செய்யப்பட்டு நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் பாளையங்கோட்டை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் இன்று சைபர் கிரைம் போலீசார் அவரை பாளையங்கோட்டை சிறைச்சாலையில் இருந்து அழைத்து வந்து நாகர்கோவில் நீதிமன்றத்தில் நீதிபதி தாயுமானவர் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டார். பாதிரியார் மீது பாலியல் குற்றச்சாட்டாக ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது .

மேலும் படிக்க | ஆதிதிராவிடர் மற்றும் பழங்கூடியினர் கூட்டத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் - முதலமைச்சர் பேச்சு!!!

அண்மையில் குலசேகரத்தைச் சேர்ந்த ஒரு மாணவி ஆன்லைன் மூலம் கொடுத்த புகாரின் அடிப்படையில் மேலும் ஒரு வழக்கும் சேர்த்து ஆறாவது வழக்காக பாதிரியார் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது இந்நிலையில் இந்த வழக்கு குறித்து விசாரணை செய்ய அவரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு அளித்தனர் அதனை விசாரணை செய்த நாகர்கோவில் நீதிமன்ற நீதிபதி தாயுமானவர் பாதிரியாரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார் மேலும் அவரை நாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் உத்தரவு பிறப்பித்தார்.