வரிச்சூர் செல்வத்தை காவலில் எடுக்க மனு! விசாரணையை ஒத்தி வைத்த நீதிமன்றம்!

வரிச்சூர் செல்வத்தை காவலில் எடுக்க மனு! விசாரணையை ஒத்தி வைத்த நீதிமன்றம்!

ரவுடி வரிச்சூர் செல்வத்தை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு மீதான விசாரணை திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மதுரையின் பிரபல ரவுடியாக இருந்து வருபவர் வரிச்சியூர் செல்வம். இவரது கூட்டாளியான விருதுநகரை சேர்ந் செந்தில் குமாரை, கடந்த 2021ம் ஆண்டு கடத்தப்பட்டார். அவரை சென்னையில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது உடலை தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே தாமிரபரணி ஆற்றில் வீசியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வரிச்சியூர் செல்வம் விருதுநகர் தனிப்படை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ரவுடி வரிச்சூர் செல்வத்தை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதித்துறை நடுவர் கவிதா மனு மீதான விசாரணையை திங்கள் கிழமைக்கு ஒத்தி வைத்தார். இதற்காக வரிச்சியூர் செல்வத்தை வரும் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த உள்ளனர்.

இதையும் படிக்க:டெல்லி புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி!