தோழியின் மகளை ஆபாச படமெடுத்து மிரட்டிய உடற்கல்வி ஆசிரியர்... உடந்தையாக இருந்த தாய், தந்தை, சகோதரி...
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே இளம்பெண்ணை ஆபாசமாக புகைப்படம் எடுத்து, மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்த அரசு பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆண்டிப்பட்டி அருகேயுள்ள கதிர்நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்குமரன். இவர் கன்னியப்பபிள்ளைபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது தோழியான திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த சுமதி, வேலை சம்பந்தமாக தேனி வரும் போது இவரது வீட்டில் தங்கி வந்துள்ளார்.
இந்நிலையில், ஒருநாள் சுமதி தனது 27 வயது மகளுடன் அருள்குமரன் வீட்டில் தங்கியுள்ளார். அப்போது, அவரது மகளை ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் அவரது மகளுடன் திருமணம் செய்தது போல் புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு, இருவரையும் மன ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பெண்ணின் தாய் சுமதி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், உடற்கல்வி ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் அவருக்கு உடந்தையாக இருந்த அருள்குமரனின் தாய், தந்தை மற்றும் சகோதரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.