கள்ள உறவால் பிறந்த குழந்தைகளை இரக்கமின்றி கொன்று புதைத்த தாய்... கள்ளகாதலனுடன் கைது!!

கள்ள உறவால் பிறந்த இரண்டு குழந்தைகளை கொன்று புதைத்த தாயை கள்ளக்காதலனுடன் காவல்துறையினர் கைது செய்தனர். 

கள்ள உறவால் பிறந்த குழந்தைகளை இரக்கமின்றி கொன்று புதைத்த தாய்... கள்ளகாதலனுடன் கைது!!

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள நொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்த மாடசாமி என்பவரின் மனைவி முத்துமாரி கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். முத்துமாரிக்கும் வடநத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த சசிகுமார் என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்ததை தொடர்ந்து முத்துமாரிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்து 7 நாட்கள் ஆன நிலையில் அந்தக் குழந்தையை குளக்கரையில் வீசியுள்ளனர்.

சேர்ந்தமரம் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், குழந்தையை வீசிச் சென்றது முத்துமாரி என்பது தெரியவந்தது. இதையடுத்து முத்துமாரியையும், சசிகுமாரையும் காவல்துறையினர் நான்கு ஆண்டுகளாக தேடிவந்த நிலையில் நேற்று இருவரையும் கைது செய்தனர்.

அப்போது முத்துமாரி ஏற்கனவே முறைகேடாக பிறந்த ஒரு பெண் குழந்தையையும்  கொன்று  புதைத்துள்ளது தெரியவந்தது. இந்த சம்பவங்கள் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.