குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூசாரி கைது!!!
6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 70 வயது கோவில் பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் காசிதர்மம் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், அந்த சிறுமியின் பெற்றோர் அவரை அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்றும், வயிற்று வலி தீராததால் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அந்த சிறுமியை அவரது பெற்றோர்கள் அழைத்து சென்றுள்ளனர்.
அப்பொழுது அந்த சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது வயிற்று வலிக்கான காரணம் குறித்து பரிசோதனை செய்தபோது பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிந்தன. அதாவது, சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதும், அதனால் தான் இந்த வயிற்று வலி ஏற்பட்டதாகவும் தெரியவந்தது.
மேலும் படிக்க | பெற்றோர்களே உஷார்...வயிற்று வலிக்கு சிறப்பு பூஜையாம்...ஆனால் செய்வது வேற..?
அதனைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளது. தகவலின் பேரில், விரைந்து வந்த அவர்கள் இந்த சம்பவம் குறித்து தென்காசி மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின், வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், சிறுமியின் மருத்துவ பரிசோதனை அறிக்கையை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது, காசிதர்மம் பகுதியை சேர்ந்த சுப்பையாபிள்ளை (வயது 70) என்ற முதியவர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும், அவர் காசிதர்மம் பகுதியில் உள்ள ஒரு பிரபல கோயிலில் பூசாரியாக இருந்து வருவதும் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை சிறையில் அடைத்தனர். மேலும், 6 வயது சிறுமிக்கு 70 வயது முதியவர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் காசிதர்மம் பகுதியில் மிகப்பெரிய அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.