பெயிலில் வெளிவந்து மீண்டும் பாலியல் வன்புணர்வு செய்த கொடூரம்!!!

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக ஜெயிலுக்கு சென்ற குற்றவாளி, பெயிலில் வெளிவந்து, மீண்டும் அதே பாதிக்கப்பட்டவறை கொடுமை செய்ததால் பதற்றம் நிலவியுள்ளது.

பெயிலில் வெளிவந்து மீண்டும் பாலியல் வன்புணர்வு செய்த கொடூரம்!!!

சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்த ஒரு குற்றவாளி, சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 26 வயதான ஒருவர், ஒரு மைனர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார். மத்திய பிரதேசம் ரேவா பகுதையைச் சேர்ந்த குற்றவாளி, கட்காரி கிராமத்தில் வசித்து வந்தார்.

கடந்த ஆண்டு செப்டெம்பர் 23 ம் தேதி, இந்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.  கடந்த வாரம் வெளியே பெயிலில் வந்த பின், அந்த பாதிக்கப்பட்ட சிறுமியை சந்தித்திருக்கிறார் அவர். ஆகஸ்ட் 26ம் தேதி, வீட்டு வேலைக்காக சென்று கொண்டிருந்த சிறுமியை, கடத்தி துன்புருத்தி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் அவர்.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் அடுத்த நாள், அருகில் இருந்து காவல் நிலையத்தில் புகாரளித்ததை அடுத்து, அப்பகுதி நீதிமன்றம் அவரை மீண்டும் சிறைக்கு தள்ளியது. போக்சோ சட்ட்டத்தின் கீழ் கைது செய்யபட்டதாக, அதிகாரிகள் பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு முறை குற்றம் செய்தவர் திருந்த தான் தண்டனை விதிக்கப்படுகிறது. அந்த தண்டனையையும் அனுபவித்து விட்டு, வெளியே வந்து, குற்றத்தை மீண்டும் செய்த அந்த குற்றவாளியால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.

--- பூஜா ராமகிருஷ்ணன்