வீட்டை வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்பனை... சாதுர்யமாக விசாரித்து கைது செய்த போலீசார்...

சென்னையில் கஞ்சா விற்பனை செய்வதற்காக, வீட்டை வாடகைக்கு எடுத்து பதுங்கி இருந்த ரவுடியை சாதுர்யமாக விசாரித்து, போலீசார் கைது செய்தனர்.

வீட்டை வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்பனை... சாதுர்யமாக விசாரித்து கைது செய்த போலீசார்...

கே.கே.நகர் விஜயராகவபுரம் பகுதியில் உள்ள குடியிருப்பில் இரு தரப்பினருக்கு இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, கஞ்சா போதையில் இருந்த சரத் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறவே, அவர் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்தனர். அதில் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில், வடபழனியை சேர்ந்த ரவுடி சரத் என்ற சரத்குமார் என்பதும், ஆந்திரா மாநிலம் நெல்லூரில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து சென்னையில் வடமாநிலத்தைச் சேர்ந்த சிலருக்கு  விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும், கஞ்சா விற்பனை செய்வதற்காக கே.கே நகர் விஜயராகவபுரம் பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து குடியேறியதும் கண்டுபிடிக்கப்பட்டது.