மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... கல்லூரி தாளாளரை கைது செய்யக்கோரி சாலை மறியல்...

திண்டுக்கல் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கல்லூரி தாளாளரை கைது செய்யக்கோரி, மாணவ-மாணவிகள் 4 மணி நேரம் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... கல்லூரி தாளாளரை கைது செய்யக்கோரி சாலை மறியல்...

திண்டுக்கல்லை சேர்ந்த தொழிலதிபர் ஜோதி முருகன், திண்டுக்கல் மற்றும் அதன்  சுற்று வட்டாரங்களில் சுரபி, கபி, ராமபிரபா உள்ளிட்ட பெயரில் நர்சிங் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கல்லூரி மாணவிகளுக்கு அவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும், அதற்கு விடுதி வார்டன் அர்ச்சனா உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் சுரபி கல்லூரியில் காட்டுத்தீ போல பரவியது. 

இதனால் வெகுண்டெழுந்த மாணவ-மாணவிகள், கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கல்லூரி விடுதி காப்பாளர் அர்ச்சனாவை கைது செய்த போலீசார், தலைமறைவான கல்லூரி தாளாளர் ஜோதி முருகனை தேடி வருகின்றனர். 

விடுதிக் காப்பாளர் அர்ச்சனா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுக் கொள்வதாகக் கூறி, மாணவ-மாணவிகள் கலைந்து சென்றனர்.