அய்யோ...திறக்க முடியலயே... !! எ.டி.எம் இயந்திரத்தை அலேக்கா தூக்கிச் சென்ற மர்மகும்பல்...

உத்திரபிரதேசத்தில் எ.டி.எம் மையத்தில் இருந்து  எ.டி.எம் இயந்திரத்தை கொள்ளையர்கள் தூக்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அய்யோ...திறக்க முடியலயே... !! எ.டி.எம் இயந்திரத்தை அலேக்கா தூக்கிச் சென்ற மர்மகும்பல்...

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் தாஜ்கஞ்ச் நகரில் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட  போலீஸ் சோதனைச்சாவ டி உள்ளது. இந்த போலீஸ் சோதனைச்சாவ டிக்கு அருகில் தனியார் வங்கிக்கு சொந்தமான எ. டி.எம் மையம் ஒன்று உள்ளது. 

இந்நிலையில், அந்த எ. டி.எம் மையத்திற்குள் இன்று அதிகாலை கொள்ளைகும்பல் ஒன்று நுழைந்துள்ளது. அந்த கொள்ளையர்கள் எ. டி.எம் இயந்திரத்தில் இருந்த பணத்தை கொள்ளைய டிக்க முயற்சித்துள்ளனர்.

ஆனால், இயந்திரத்தை திறக்கமு டியாததால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் அதிலிருந்த 8 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தோடு  எ. டி.எம் இயந்திரத்தை தரையில் இருந்து முழுவதும் பெயர்த்து துக்கிச்சென்றுள்ளனர்.

இதனையடுத்து, பணம் எடுப்பதற்காக  எ. டி.எம் மையத்திற்கு வந்த வா டிக்கையாளர்கள் எ. டி.எம் இயந்திரம் உடைக்க பட் டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.  

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 8 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்துடன் எ. டி.எம் இயந்திரத்தை துக்கிச்சென்ற கொள்ளையர்களை தீவிரமாக தே டி வருகின்றனர்.