ஒரே நாளில் 4 ஏடிஎம் மையங்களில் அரங்கேறிய கொள்ளை சம்பவம்...!

ஒரே நாளில் 4 ஏடிஎம் மையங்களில் அரங்கேறிய கொள்ளை சம்பவம்...!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து 75 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து 20 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதேபோல், திருவண்ணாமலை தேனி மலைப்பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திலுள்ள இயந்திரத்தையும் உடைத்து 31 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

இதையும் படிக்க : 2வது நாளாக கொடி அணிவகுப்பு நடத்திய துணை இராணுவப் படையினர்...!

அதேசமயம், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்த மர்மநபர்கள், இயந்திரத்தை உடைத்து 19 லட்சம் ரூபாயையும், அதேபோன்று கலசபாக்கத்திலுள்ள ஒரு ஏடிஎம் மையத்திலுள்ள இயந்திரத்தை உடைத்து 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். பின்னர் இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், துணைக் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

இதற்கிடையில் ஒரே நாளில் நான்கு ஏடிஎம் மையங்களில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.