குடிபோதையில் தாயை கொலை செய்த ரவுடி மகன்...! தண்டனை விதித்த நீதிமன்றம்...!

குடிபோதையில் தாயை கொலை செய்த ரவுடி மகன்...! தண்டனை விதித்த நீதிமன்றம்...!

புதுச்சேரியில் குடிபோதையில் தாயை அடித்து கொலை செய்த வழக்கில் பிரபல ரவுடிக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதுச்சேரி வினோபா நகரைச் சேர்ந்தவர் வெரோன்(45). பிரபல ரவுடியான இவர் மீது 15 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவரின் இதுபோன்ற செயலால் அவரது தாய் சிரஞ்சீவி, வெரோனிடம் பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2016 ம் ஆண்டு டிசம்பர் 30ந் தேதி குடிபோதையில் வந்த வெரோன், தாயிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் வாக்குவாதம் முற்றவே அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தலைமறைவானார். இதுகுறித்து தன்வந்தரி நகர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து வெரோனை தேடி வந்த நிலையில், பல்வேறு கோவில்களில் பிச்சைகாரன் போல வேடமிட்டு சுற்றித் திரிந்த வெரோனை கடந்த ஆண்டு போலீசார் கைது செய்து புதுச்சேரி சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில் வெரோன் தனது தாயை அடித்து கொலை செய்த வழக்கானது, கடந்த 6 வருடங்களாக புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் நேற்று வெரோனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.