ரூ. 1.20 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள்... ஆலங்குளத்தில் போலீசார் பறிமுதல்...

ஆலங்குளம் பகுதிகளில்   ரூ.1.20 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ. 1.20 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள்... ஆலங்குளத்தில் போலீசார் பறிமுதல்...

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கலவரம் வராமல் தடுக்கும் பணியில் ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னிவளவன் தலைமையில் எஸ்ஐ தினேஷ் பாபு, ஏட்டுகள் லிங்கராஜா, பாலமுருகன் ஆகியோர் நேற்று காலை முதல் ஆலங்குளம் ஜோதி நகர், நல்லூர், அத்தியூத்து, பூலாங்குளம்,புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மதுபான கடைகளின் அருகில் அடையாளம் தெரியாத வண்ணம் நின்று கொண்டு அந்தப் பகுதிகளில் பெட்டி, பெட்டியாகவும், சாக்குமூட்டையிலும் மது பாட்டில்கள் வாங்கி வருபவர்களை கண்காணித்தனர்.

இதில் 21 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து சுமார் ரூ.1.20 லட்சம் மதிப்பிலான மொத்தம் 885 மதுபாட்டில்களும் அவர்கள் பயன்படுத்திய 13 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது. ஏற்கனவே தமிழக அரசு மொத்தமாக டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் விற்பனை செய்யக்கூடாது என அறிவித்திருந்தது குறிப்பிடதக்கது.

ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் 283 அரிவாள் மற்றும் கத்திகளை ஆலங்குளம் போலீசார் பறிமுதல் செய்து இருந்த நிலையில் இன்று 1.20 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.