கொடைக்கானலில் போதை காளான் விற்பனை..!
கொடைக்கானல் பகுதியில் போதைக் காளான் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை பகுதியில் போதை காளான் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தள்ளது.
அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையில் போலீசர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பூம்பாறை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற நால்வரை பிடித்து விசாரித்தனர்.
அவர்களை விசாரித்ததில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த விஷ்ணு (30) , கேரள மாநிலம் திருச்சூரை பிரசாத் (37), கேரள மாநிலம் அப்சல்கான் (26), பூம்பாறை சந்திரமோகன் (57), ஆகிய நால்வரும் இந்த பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து போதை காளான் விற்று வந்தது தெரிய வந்தது.
இது பற்றி கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து சுற்றுலா பயணிகளை குறிவைத்து போதை காளான் விற்று வந்த விஷ்ணு, பிரசாத், அப்சல் கான், சந்திரமோகன், ஆகிய நால்வரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து போதை காளானையும் கைப்பற்றினர்.
இதையும் படிக்க | தனியார் கொரியர் அலுவலகத்தில் திடீர் ரெய்டு.! சோதனையில் சிக்கிய போதை பொருட்கள்...! பழனியில் பரபரப்பு.