தோஷம் கழிப்பதாக கூறி சிறுமிக்கு ரூம் போட்ட சாமியார்.. இளசுகளை இளக வைக்கும் பகீர் சம்பவம்

15 வயது சிறுமியை பாலியல் பலாத்கார வழக்கில் ஈடுபட்ட சாமியாருக்கு சாகும் வரை சிறைத்தண்டனை விதித்து ராமநாதபுரம் மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

தோஷம் கழிப்பதாக கூறி சிறுமிக்கு ரூம் போட்ட சாமியார்.. இளசுகளை இளக வைக்கும் பகீர் சம்பவம்

தூத்துக்குடி மாவட்டம் முக்காணி பகுதியை சேர்ந்த மாசானமுத்து என்பவர், அப்பகுதியில் உள்ள சுடலைமாட சுவாமி கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார். 

அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி சுடலைமாட சுவாமி கோயிலுக்கு அடிக்கடி வந்து செல்வதாக கூறப்படுகிறது.

அந்தப் பெண்ணிடம் சாமியார் பேசி பழகி உனக்கு தோஷம் உள்ளதாக கூறி இந்த தோஷத்தை நிவர்த்தி பண்ண மாசானமுத்து சாமியார் ராமேஸ்வரம் கடற்கரைக்கு அழைத்துச் சென்று சில பரிகாரங்கள் செய்தால் உடல்நிலை சரியாகும் என கூறியிருக்கிறார்.

இதனையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்த பெண்னை  ராமேஸ்வரம் அறைக்கு சென்று ஒரு தனியார் விடுதியில் தங்க வைத்துள்ளனர். அன்று இரவு அந்தப் பெண்ணை மாசானமுத்து சாமியார் இரவில் பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

அங்கிருந்து  சிறுமி தப்பிச் சென்று ராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருக்கிறார். காவல்  ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சாமியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த வழக்கானது இன்று இராமநாதபுரம் மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  இந்நிலையில்  இன்று ராமநாதபுரம்  மகிளா  நீதிமன்ற நீதிபதி சுபத்ரா விசாரித்து சாமியாருக்கு  சாகும் வரை சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். இதனை அடுத்து அந்த சாமியார்  ராமநாதபுரம் சிறைச் சாலைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டார்.