”8வது படிக்கும்போதே கர்ப்பமாக்கி காட்டுவேன்” கானா புள்ளிங்கோ சரவெடி சரணை வலைவீசி தேடும் போலீஸ்...

8வது படிக்கும்போதே கர்ப்பமாக்கி காட்டுவேன் என பிரபல கான பாடகர் சரவெடி சரண் என்பவர் பாடிய பாடல் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில் சரவெடி சரண் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

”8வது படிக்கும்போதே கர்ப்பமாக்கி காட்டுவேன்” கானா புள்ளிங்கோ சரவெடி சரணை வலைவீசி தேடும் போலீஸ்...

டோனி ராக் எ போட்டி கானா என்ற பெயரில் ஒரு வீடியோ 2020 மார்ச் மாதம் வெளியாகியிருக்கிறது. அதில் சரவெடி சரண் மற்றும் டோனி ராக் ஆகிய இரு கானா பாடகர்கள் பாடல் பாடுகின்றனர். குருவிக் கூடு மண்டையுடன் சரவெடி சரண் பாடும் பாடலில் உள்ள வரிகள், சிறுமிகளை ஆபாசமாக சித்தரிக்கிறது. மஜாவாக மாட்டிக்கிச்சு எனக்கு ஏத்த லடுக்கி (சிறுமி பால்வாடியில வாங்கி கொடுத்தேன் பூந்திய, எட்டாவது பாஸாயிட்டு எடுக்க வச்சேன் வாந்தியை. என பாடியுள்ளார்.தற்போது இந்த வீடியோ மெதுவாக பரவ துவங்கியது. இதனை பார்த்த பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

அத்துடன் இது குழந்தைகளுக்கு எதிரான வன்முறையாகவும் பார்க்கப்படுகிறது. மிகவும் வக்கிரமான மனநிலையில் பாடப்பட்ட இந்தப்பாடல் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பை பெற்று வருகிறது. இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அவ்வீடியோ திருவள்ளூர் எஸ்.பி., வருண் குமார் கவனத்திற்கு சென்றுள்ளது. அந்த பாடலை பாடியவர்கள் விவரங்களை சேகரித்து வருவதாக வருண் குமார் தெரிவித்துள்ளவர், போக்சோ சட்டத்தின் 16-வது பிரிவை கவனத்தில் கொள்ளும்படி மற்றவர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.