பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் கைது...!

சென்னை இராயபுரத்தில் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் கைது...!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பால அருணாசலம் தெருவைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று வழக்கம் போல் காலை பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு தாமதமாக வந்த அச்சிறுமியிடம் தாய் விசாரித்தபோது, அச்சிறுமிக்கும் ராயபுரம் எம்.ஜி.ஆர். நகர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜிக்கும் கடந்த 4 மாதங்களாக பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்தது.

மேலும், தன்னை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார், உடனடியாக இராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஸ்டீபன் ராஜை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்