எரும்பட்டி அருகே பயங்கரம்.. தனியார் நிதி நிறுவன ஊழியர் வெட்டிக்கொலை...!

எரும்பட்டி அருகே பயங்கரம்.. தனியார் நிதி நிறுவன ஊழியர் வெட்டிக்கொலை...!

நாமக்கல் அடுத்த எருமைப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சசிகுமார் (24), இவர் பிரபல நிதி நிறுவனத்தில் கலெக்சன் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல இயற்கை உபாதை கழிப்பதற்கு வீட்டிலிருந்து அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு சென்று உள்ளார். அப்போது காட்டுப்பகுதியில் மறைந்திருந்த கும்பல் சசிகுமாரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது.

இதில் சுதாகரித்துக் கொண்ட சசிகுமார் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தார். ஆனால் அந்த கும்பல் அவரை வெட்டி சாய்த்தது. இதில் படுகாயம் அடைந்த சசிகுமார் அந்த இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். சசிகுமார் உயிரிழந்ததை அடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.

சசிகுமாரின் உடலை பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் எருமபட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சசிகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தொடர்ந்து தடவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து முக்கிய ஆதாரங்களை சேகரித்தனர்.

காதல் விவகாரமா ? முன் விரோத காரணமாக கொலை செய்யப்பட்டாரா என போலீசார் தீவிர விசாரனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.