விஷம் குடித்தும் வாழ முடியாத சோகம்:  2K கிட் மாணவனை கல்யாணம் செய்த பள்ளி ஆசிரியை  போக்சோவில் கைது.!!

குன்னம் அருகே பள்ளி மாணவனை காதல் திருமணம் செய்த தனியார் பள்ளி ஆசிரியை போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

விஷம் குடித்தும் வாழ முடியாத சோகம்:  2K கிட் மாணவனை கல்யாணம் செய்த பள்ளி ஆசிரியை  போக்சோவில் கைது.!!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்தை சேர்ந்த மாணவர் ஒருவர், அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்தான். மாணவன் படித்த பள்ளியில் அரியலூர் மாவட்டம், அம்பாபூரைச் சேர்ந்த ராசாத்தி என்ற ஆசிரியை பணியாற்றினார். இந்த நிலையில் ஆசிரியை ராசாத்தி அந்த மாணவனை காதலித்துள்ளார்.

மாணவனுக்கு வயது குறைவு என்பதால் இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கடந்த அக்டோபர் மாதம் 22ம் தேதி மாணவனுடன் வீட்டை விட்டு வெளியேறிய ராசாத்தி மூங்கில்பாடி கிராமத்திற்கு சென்று உறவினர் வீட்டில் வைத்து மாணவனை திருமணம் செய்து கொண்டார்.தகவல் அறிந்த காதல் ஜோடிகளின் பெற்றோர் மூங்கில் பாடி கிராமத்திற்கு சென்றனர்.

இதனால், தங்களைப் பிரித்து விடுவார்கள் என்று பயந்து போன காதல் ஜோடி சேர்ந்துதான் வாழ முடியவில்லை. சாவிலாவது ஒன்று சேர்வோம் என்று கருதி அக்டோபர் 22ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.பின்னர், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவனும் ராசாத்தியும் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவரும் பூரண குணமடைந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீடு திரும்பினர்.

இதையடுத்து, ஆசிரியை ராசாத்தி மீது ஆள் கடத்தல், குழந்தை திருமணம், தற்கொலைக்கு தூண்டியது, போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்தன. பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ராசாத்தி ஆஜர்படுத்தி திருச்சி பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.