காத்தாடியை பிடிக்க முயன்ற பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி பலி...

சென்னை அருகே மதுரவாயலில் அறுந்து போன காத்தாடியை பிடிக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. 

காத்தாடியை பிடிக்க முயன்ற பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி பலி...

சென்னை அருகே மதுரவாயலில் அறுந்து போன காத்தாடியை பிடிக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. 

மதுரவாயல்  கோபாலகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் நடராஜ். இவரது மகன் கிஷோர் 6 வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் நேற்று விட்டில்  தனியாக இருந்த கிஷோர் நண்பர்களுடன் இணைந்து மாடியில் காத்தாடி விட்டு விளையாடினான். அப்போது காத்தாடியை பிடிக்க சென்றபோது எதிர்பாராதவிதமாக அந்த வழியே சென்ற மின்சார வயரில் கால் பட்டு உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் கிஷோரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். ஆனால் கிஷோர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.