தேனியில் பரபரப்பு..! காதலித்த குற்றத்தால் மாணவன் கழுத்தை அறுத்து படுகொலை..!

தேனியில் பரபரப்பு..!  காதலித்த குற்றத்தால் மாணவன்  கழுத்தை அறுத்து  படுகொலை..!

பெண்ணை காதலித்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் கழுத்து துண்டாக வெட்டப்பட்டு கொடூர கொலை செய்யப்பட்டுள்ளார்... 

தேனி மாவட்டம் பூதிபுரம் அருகே உள்ள வீருசின்னம்மாள்புரத்தில் வசிக்கும்  சரவணன் - ஊஞ்சம்மாள் தம்பதியரின்  மகன் கமலேஸ்வரன் (வயது 18).  இவர் பூதிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துள்ளார்.  இவர் பழனி செட்டி பட்டியில் உள்ள பழனியப்பா பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். 

இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதல் தொடர்பாக இரு குடும்பத்தாருக்கும் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த பிரச்சனைகளில் அந்தப் பெண்ணின் பெற்றோர் இருவரும் கமலேஸ்வரனுக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இருசக்கர வாகனத்தில் பூதிபுரம் சென்ற கமலேஸ்வரன் வீடு திரும்பவில்லை என அவரது  பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இவ்வாறிருக்க,  பூதிபுரம் கல்லூரணி பகுதியில் இளைஞர் ஒருவர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு  சென்ற காவல்துறையினர் இறந்து கிடப்பது கமலேஸ்வரன் தான்  என்பதை உறுதி செய்தனர். உடனே,  பிரேதத்தை கைப்பற்றி காவல்துறையினர் கா. நா விளக்கு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையும் படிக்க       } நொச்சிக்குப்பம்: "பூர்வீக மக்களுக்கு" பட்டா வழங்க வலியுறுத்தல்!

இந்நிலையில் அந்த பெண்ணின் தந்தையை காவல்துறை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் 10 ஆண்டு தண்டனை பெறப்பட்டு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தன்னாட்சி ஜாமீனில் வெளிவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பள்ளி பருவ காதலால் இளைஞர்  கொலை செய்யப்பட்ட சம்பவம் தேனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க       } "வழிப்பறி கொள்ளை"யனாக மாறிய போலீஸ்...!!