7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. அக்பர் அலி போக்சோவில் கைது..!

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. அக்பர் அலி போக்சோவில் கைது..!

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதே பகுதியைச் சேர்ந்த அக்பர் அலி என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பாலியல் தொல்லை: புகார்

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கவுந்தப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் அக்பர் அலி.. இவர் அதே பகுதியில் சைக்கிள் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் கவுந்தபாடி பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி தனது பெற்றோர்களிடம் தெரிவித்ததையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் ஈரோடு சைல்ட் லைன் அமைப்பிற்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

போக்சோ சட்டத்தின் கீழ் கைது

இந்த தகவலின் பெயரில் ஈரோடு சைல்ட் லைன் அமைப்பினர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்த அக்பர் அலி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.