வீட்டின் முன் விளையாடிய சிறுமிக்கு பாலியல் தொல்லை...முதியவர் கைது...!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த 8 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடுகப்பாளையம் புதூர் ஊராட்சிக்குட்பட்ட அறிவொளிபுதூர் பகுதியில் வசித்து வருபவர் குமார்.65 வயது முதியவரான இவர், தனது மகள் வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த 3 வகுப்பு படித்து வரும் பள்ளி சிறுமி வீதியில் விளையாடி கொண்டிருந்த போது சிறுமியை தான் தங்கியிருந்த அறைக்கு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அங்கிருந்து தப்பித்து தனது வீட்டிற்கு அழுது கொண்டே சென்ற, இது குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அச்சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் அனைத்து மகளிர் போலிசார் 8 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த, முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.