அழகு நிலையத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை... முக்கிய குற்றவாளி பெங்களூரில் கைது...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அரசு உதவி பெறும் பள்ளி பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தோழி, அழகுநிலைய பெண் பொறுப்பாளர் உட்பட 4 கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியை கைது செய்தனர்.
காரைக்குடி அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஒருவர், அப்பகுதியில் உள்ள அழகு நிலையத்திற்கு தனது தோழியுடன் கண் புருவம் திருத்த சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த அழகு நிலைய பெண் பொறுப்பாளருடன் நட்பு ரீதியாக பழக்கம் ஏற்பட்டது.
அவரது உதவியுடன் அந்த மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் இதில் பியூட்டி பார்லர் நிர்வாகியும் பியூட்டிசனுமான மேற்கு வங்கத்தை சேர்ந்த மன்சில் அந்த மாணவியிடம் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவி தந்தை கொடுத்த புகாரின் பேரில் மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கை சேர்ந்த மன்ஸில் (28) விக்னேஷ் (28), லட்சுமி (45) உட்பட 6 பேர் மீது காரைக்குடி மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, லெட்சுமி, விக்னேஷ், சிரஞ்சீவி, பள்ளி தோழி உள்ளிட்ட 4 பேர் கைது செய்துள்ள நிலையில், பெங்களூரில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி டார்ஜிலிங்கைச் சேர்ந்த மன்ஸிலை கைது செய்து காரைக்குடி அழைத்து வந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.