ஷாருக்கான் மகன் ஆர்யன்கானின் ஜாமின் மனு இன்று விசாரணை...

தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானின் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வருகிறது. 

ஷாருக்கான் மகன் ஆர்யன்கானின் ஜாமின் மனு இன்று விசாரணை...

மும்பையிலிருந்து கோவா சென்ற கொகுசுக்கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் உள்பட 8 பேரை மும்பை போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் ஆர்யன்கானின் விசாரணைக் காவல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அவர் உள்பட8 பேரும் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

அப்போது ஆர்யன்கானை அக்டோபர் 11ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க, போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினர் அனுமதி கோரினர். ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதி அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ஆர்யன்கான்  சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.