பாம்பு கடித்து ஆறாம் வகுப்பு மாணவி பலி…  

திருச்சி மாவட்டம் துறையூரில் பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாம்பு கடித்து ஆறாம் வகுப்பு மாணவி பலி…   

திருச்சி மாவட்டம் துறையூரில் பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த கோட்டா தூர் சேர்ந்தவர் சந்திரசேகரன் விவசாயி. இவரது மகள் வித்யா வயசு 11 தோட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறா.ர் இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி தனது பெற்றோர்களுடன் வயலுக்கு சென்றவர் மாலை வீடு திரும்ப வந்து கொண்டிருந்தனர். அப்போது வயல் வெளியில் உள்ள வரப்பில் நடக்கும் பொழுது இடது காலில் பாம்பு கடித்துள்ளது. அப்போது  குழந்தையின் அலறல் சத்தம்  கேட்டு பெற்றோர்கள் ஓடிவந்து பார்த்தபோது சிறுமியை கடித்த பாம்பு தப்பித்து ஓடியது. உடனடியாக சிறுமியை துறையூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு இரத்த பரிசோதனை செய்யப்பட்டபோது விஷத்தன்மை அதிகமாக உள்ளதால் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனை சிகிச்சை அநுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை ஆறாம் வகுப்பு பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்