குடிபோதையில் தகராறு செய்து வந்த தந்தை...ஆத்திரத்தில் மகன் செய்த விபரீத செயல்!

குடிபோதையில் தகராறு செய்து வந்த தந்தை...ஆத்திரத்தில் மகன் செய்த விபரீத செயல்!

சிவகாசியில் தந்தையை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொன்ற மகனை போலீசார் கைது செய்யபட்டார். 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கோட்டையூர் கிராமத்தை சேர்ந்த முதியவர் கிருஷ்ணசாமி - மாரியம்மாள் தம்பதி மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு கருப்பசாமி, சஞ்சீவிகுமார், முத்துச்செல்வி ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர். அதில் சஞ்சீவிகுமார், முத்துச்செல்வி இருவருக்கும் திருமணமான நிலையில், கருப்பசாமி மட்டும் உடல் நலக்குறைவால் இன்னும் திருமணமாகாமல் இருக்கிறார். 

இதையும் படிக்க : தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டார் திரிணாமுல் காங். உறுப்பினர் டெரெக் ஓ பிரெய்ன்!

இந்த நிலையில் கிருஷ்ணசாமி அன்றாடம் மது போதையில் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்துவந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது மகன் கருப்பசாமி தந்தையின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக தெரிகிறது.

இதில் படுகாயமடைந்த முதியவர் கிருஷ்ணசாமி உயிருக்கு போராடும் நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி கிருஷ்ணசாமி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த போலீசார் கருப்பசாமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.