தகாத உறவுக்கு இடையூறாக இருந்த மகன்... கள்ளக்காதலனை வைத்து கொன்ற தாய்...

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனை கள்ளக்காதலனுடன் இணைந்து கொலை செய்த கொடூர தாய் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

தகாத உறவுக்கு இடையூறாக இருந்த மகன்... கள்ளக்காதலனை வைத்து கொன்ற தாய்...

திருவள்ளூர் மாவட்டம், நத்தம் கிராமத்தில் உள்ள கோயில் குளத்தில் கடந்த 11 ஆம் தேதி அழுகிய நிலையில் சிறுவனின் உடல் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் பேரனை அண்ணாமலை என்பவர் அழைத்துச் சென்று இதுவரை திரும்பவில்லை என புகாரளித்திருந்தார். 

இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. சிறுவனின் தாய் துர்கா, தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கோபால் என்பவருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இதனையறிந்த சிறுவன் தனது தந்தையிடம் கூறப்போவதாக தெரிவித்துள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் சிறுவனை கொலைச் செய்துவிடலாம் என எண்ணியுள்ளனர்.

தனது தாத்தா வீட்டில் இருந்த சிறுவனை, வேறொரு  சிறுவன் மூலம் அழைத்து வந்த கோபால், சிறுவனை கழுத்தை அறுத்து கொலை செய்து கோயில் குளத்தில் வீசி சென்றுள்ளான். இதனையடுத்து சிறுவனை கொலைச் செய்த கள்ளக்காதலன் கோபால் மற்றும் கொடூர தாய் துர்காவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.