கள்ளச்சாராயம் காய்ச்சிய கொங்குநாடு இளைஞர் பேரவையின் மாநில அமைப்பாளர் கைது...

ஈரோடு அருகே சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்த கொங்குநாடு இளைஞர் பேரவையின் மாநில அமைப்பாளர் கோபால் ரமேஷ் உட்பட இருவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளச்சாராயம் காய்ச்சிய கொங்குநாடு இளைஞர் பேரவையின் மாநில அமைப்பாளர் கைது...

ஈரோடு அடுத்த முள்ளாம்பரப்பு அருகே உள்ள காகத்தான்வலசு பகுதியைச் சேர்ந்தவர் கோபால் ரமேஷ். கொங்குநாடு இளைஞர் பேரவையின் மாநில அமைப்பாளரான இவரின் விவசாய தோட்டத்தில் சாராய ஊறல் வைத்திருப்பதாக ஈரோடு மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மதுவிலக்கு ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான காவலர்கள் தோட்டத்தில் சோதனை மேற்கொண்டனர்.

இதில், 450 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் போடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை  கீழே கொட்டி அழித்த போலீசார், சட்டத்திற்கு புறம்பாக சாராயம் காய்ச்சிய கொங்குநாடு கோபால் ரமேஷ், பாஸ்கரன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.