பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை... மாணவி குறிப்பிட்ட பெயர்கள் குறித்து விசாரணை...

கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அப்பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனை வரும் 26-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை... மாணவி குறிப்பிட்ட பெயர்கள் குறித்து விசாரணை...

கோவை மாவட்டம் ஆர். எஸ்.புரத்தில் பாலியல் தொல்லை காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அதற்கு காரணமான இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைதாகி உடுமலை சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு குறித்த விவரங்களை நன்கு அறிந்தும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது பள்ளி முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், காவல்துறைக்கு புகாரும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், பெங்களூருவில் பதுங்கி இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்த போலீசார், அவரை ஆர். எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து 12 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.

இதனை பதிவு செய்து கொண்ட பின்னர், அவர் மகளிர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தபட்டார். அப்போது, வருகிற 26-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்திரவிட்டதை தொடர்ந்து, கோவை சிறையில் மீரா ஜாக்சன் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, துண்டு சீட்டில் மாணவி குறிப்பிட்டுள்ள பெயர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக, கோவை மாநகர துணை ஆணையர் ஜெயச்சந்திரன் கூறியுள்ளார்.