எனக்கு கிடைக்காதவ ...யாருக்கும் கிடைக்க கூடாது...காதலனின் பரபரப்பு வாக்குமூலம்...!

எனக்கு கிடைக்காதவ ...யாருக்கும் கிடைக்க கூடாது...காதலனின் பரபரப்பு வாக்குமூலம்...!

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மாணவி கொலை:

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று கல்லூரி மாணவி சத்யா என்பவர், காதலன் சதீஷால் ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, தலைமறைவான காதலன் சதீஷை பிடிப்பதற்கு 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

கொலையாளி கைது:

பின்னர் போலீசாரின் தேடுதல் வேட்டையில் நேற்றிரவு துரைப்பாக்கத்தில் பதுங்கியிருந்த சதீஷ் கைது செய்யப்பட்டார். சதீஷை கைது செய்த போலீசார், தாம்பரத்திற்கு அழைத்து செல்லப்பட்டு ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டது.

வாக்குமூலம்:

அந்த விசாரணையில், தனக்கு கிடைக்காத சத்யா யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற எண்ணத்தில் கொலை செய்ததாகவும், சத்யாவை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்யும் எண்ணத்திலேயே வந்ததாகவும், ஆனால் அதற்குள் பொதுமக்கள் சூழ்ந்ததால் தப்பியோடியதாக காவல்துறையிடனரிடம் கொலையாளி சதீஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். 

இதையும் படிக்க: முறிந்த 5 வருட காதல்.. ரயில் முன் காதலியை தள்ளிவிட்ட காதலன்.. போலீசார் அதிரடி கைது.. தந்தை மரணம்..!

சத்யாவின் அத்தை பரபரப்பு பேட்டி:

இதனிடையே, சத்யாவை பின்தொடர்ந்து காதலிக்கும்படி தொல்லை கொடுத்ததாக சதீஷ் மீது சத்யாவின் அத்தை பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.  மேலும் வேலைக்கு செல்லாமல் சுற்றித்திரிந்த சதீஷ் பற்றி சத்யா ஏற்கனவே வீட்டில் கூறியதாகவும், காவல்நிலையத்தில் இதுதொடர்பாக பேசி தீர்க்கப்பட்ட நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு இந்த கொலை நடந்திருப்பதாகவும் வேதனை தெரிவித்தார்.

மாணவியின் தந்தை இறப்பு:

இதற்கிடையில் மகளின் இறப்பு செய்தி அறிந்து அவரது தந்தை மாணிக்கம் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியானது. மேலும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.

விஷம் கலந்து உயிரிழப்பு:

இந்நிலையில், மகளின் இறப்பு செய்தி அறிந்து அவரது தந்தை மாணிக்கம் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியான நிலையில், மாணவியின் தந்தை மதுவில் விஷம் கலந்து குடித்து உயிரிழந்ததாக தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மாணவி சத்யா தன் காதலை நிராகரித்தார் என்பதற்காக, காதலன் சதீஷ் செய்த விபரீத செயலால் தற்போது பெற்ற பிள்ளையையும் இழந்து, கணவரையும் இழந்து சத்யாவின் தாய் நிர்கதியாகியுள்ளார். இந்த சம்பவம் கேட்போர் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.