மனைவி மீது சந்தேகமடைந்த கணவன்...கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோட்டம்....!

திருவள்ளுர் மாவட்டம் திருத்தணி அருகே மனைவி மீது சந்தேகப்பட்டு கத்தியால் கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

மனைவி மீது சந்தேகமடைந்த கணவன்...கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோட்டம்....!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்குட்பட்ட ஆர். கே.பேட்டை தாலுகாவை சேர்ந்த அய்யனேரி கிராமத்தில் டைலர் கடை வைத்து நடத்தி வந்தவர் மங்களா என்ற பெண்மணி. இவர் மீது அவரது கணவர் தமிழ்மணி சந்தேகப்பட்டு கடையில் வைத்து மனைவியை கத்தியால் கொடூரமான முறையில்  கொலை செய்து விட்டு தப்பியோடினார்.

இதனை கண்ட அங்கிருந்த பொதுமக்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மங்களாவை,  ஆம்புலன்ஸ் உதவியுடன் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மங்கலா இறந்துவிட்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆர். கே.பேட்டை போலீசார், கொலை  குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டனர். விசாரணையில்  கொலை செய்யப்பட்ட மங்களா, அவரது கணவர் தமிழ்மணியை ஆறு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளதும் தெரியவந்தது.

அதன்பின்னர் மனைவி மங்களா மீது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் ஆத்திரத்தில் மனைவியை கத்தியால் கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையில் மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.