இளம்பெண் மர்மமான முறையில் குத்தி கொலை: தகாத உறவு காரணமா?  

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே இளம்பெண் மர்மமான முறையில் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண் மர்மமான முறையில் குத்தி கொலை: தகாத உறவு காரணமா?   

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே இளம்பெண் மர்மமான முறையில் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலனூர் அருகே திருநீலகண்டபுரத்தைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி , இவரது மனைவி கிருத்திகா. இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் பொன்னுச்சாமியின் உறவுக்காரான சிற்பி கந்தசாமி. இவர் மனைவியை விட்டு பிரிந்து கடந்த பத்து வருடங்களாக தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கிருத்திகா விற்கும் கந்தசாமிக்கும் தகாத உறவு ஏற்பட்டதாகவும் இதனால் அடிக்கடி கிருத்திகாவின் வீட்டிற்கு  கந்தசாமி வந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று கிருத்திகாவின் கணவர் பொன்னுசாமி வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த நிலையில் கிருத்திகா ரத்த வெள்ளத்தில் கத்தி குத்து காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார்.

இதுகுறித்து பொன்னுசாமி அளித்த தகவலின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவான  சிற்பி கந்தசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.