பைக்கை வீலிங் செய்து பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபர்கள் கைது!

சென்னையில் வீலிங் செய்தவாறு இருசக்கர வாகனத்தை ஓட்டு பொதுமக்களை அச்சுறுத்தியதாக இரு இளைஞர்களை போலீசார் கைது செய்து அவர்களது வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

பைக்கை வீலிங் செய்து பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபர்கள் கைது!

சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் வெட்டுவாங்கனி பகுதியில் இருந்து ஈஞ்சம்பாக்கம் செல்லும் வழியாக இளைஞர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை ஓட்டியதாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் உள்ள சி. சி.டி.வி காட் சிகளை ஆய்வு மேற்கொண்டபோது இரு இளைஞர்கள் வீலிங் செய்தவாறு இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றது தெரியவந்தது. 

அதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவ்விருவரும் சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த எலக்டிரீஷியன் பணியாற்றி வரும் தியாகராஜன் மற்றும் ஈஞ்சம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜே. சி.பி ஓட்டுநர் முத்துக்குமார் என்பதும் தெரியவந்தது.

அதனடிப்படையில் அவ்விருவரையும் அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் கைது செய்து அவர்களது இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.  மேலும், போலீசார் அவ்விருவரையும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வரும் 13 ஆம் தேதி வரை நீதிமன்ற உத்தரவுப்படி சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைத்தனர்.