மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்... இளைஞரை ஆணவக்கொலை செய்த கொடூரம்  

கர்நாடகாவில் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞரை ஆணவக்கொலை செய்த விவகாரத்தில் தாய், தந்தை உட்பட 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்... இளைஞரை ஆணவக்கொலை செய்த கொடூரம்   

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம் கானாபூர் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் கடந்த 28ஆம் தேதி அர்பஸ் முல்லா என்ற இளைஞர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் அர்பஸ் முல்லாவின் தாய் நசீமா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது மகன் அர்பஸ் முல்லா, ஸ்வேதா என்ற பெண்ணை காதலித்ததாகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவருடைய பெற்றோர் ஆள் வைத்து கொலை செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

இதனடிப்படையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதில் ஸ்வேத்தாவின் தந்தை ஈரப்பா கும்பர, அர்பஸ் முல்லாவை கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் அர்பஸ் முல்லாவின் தாய் நசீமாவை நேரில் அழைத்து மிரட்டியதும் விசாரணையில் அம்பலமானது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் பணம் கொடுத்து அர்பஸ் முல்லாவை கொலை செய்து ரயில் தண்டவாளத்தில் வீசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஸ்வேத்தாவின் தந்தை ஈரப்பா கும்பர அவருடைய தாய் உள்ளிட்ட 10 பேரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.