சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை...

தெலுங்கானாவில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞர், ரயில் தண்டவாளத்தில் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞர் ரயில்  முன் பாய்ந்து தற்கொலை...

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே சைதாபாத் என்ற பகுதியில் கடந்த 9ஆம் தேதி அன்று, 6 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டார். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த பல்லகொண்டா ராஜூ என்ற இளைஞர் தான், கொலையாளி என்பது தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது. அவர் தப்பி ஓடி தலைமறைவான நிலையில், குற்றவாளியைப் பிடிப்பதற்காக 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.மேலும் இவரைப்பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என தெலுங்கான காவல்துறையினர் அறிவித்து இருந்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் என்கவுண்ட்டர் செய்யப்படுவார்கள் என்று அம்மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சர் மல்லா ரெட்டி நேற்று கூறி இருந்தார். இந்த நிலையில், பல்லகொண்டா ராஜூ, ரயில் தண்டவாளத்தில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வாராங்கல் அருகே ரயில் தண்டவாளத்தில் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், இது பல்லகொண்டா ராஜூவின் உடல் தானா? என்பது குறித்து டிஎன்.ஏ. பரிசோதனை மூலம் உறுதி செய்யப்படும் என போலீஸ் டிஜிபி தெரிவித்துள்ளார்.