மனைவியை கிண்டலடித்த சிறுவன்... கத்திக்குத்து வாங்கிய கணவர்..!

மனைவியை கிண்டலடித்த சிறுவன்... கத்திக்குத்து வாங்கிய கணவர்..!

விருத்தாசலத்தில் மனைவியை கிண்டலடித்து சிறுவனை தட்டிக்கேட்ட கணவருக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது.

கிண்டல் அடித்த 17 வயது சிறுவன்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணலூரைச் சேர்ந்த ராஜாங்கம் மகன் விஜய்(35). இவரது மனைவி சித்ரா. இவர் தனது குடியிருப்பு அருகே உள்ள கடைக்குச் சென்றுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும், ராஜேந்திரன் என்பவரின் மகனான 17 வயது கொண்ட சிறுவன் நவின், சித்ராவை கிண்டல் அடித்ததாக கூறப்படுகிறது.

சிறுவனை அழைத்து தட்டி கேட்ட கணவர்

இதையடுத்து சித்ரா வீட்டிலிருந்த தனது கணவர் விஜயிடம் கிண்டல் தொடர்பாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜய்,  சிறுவனை அழைத்து தட்டி கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.

கணவருக்கு கத்தி குத்து 

அப்போது கஞ்சா போதையில் இருந்த, சிறுவன் மறைத்து வைத்திருந்த, கத்தியை எடுத்து விஜய் கழுத்தில் குத்தி விட்டு, அங்கிருந்து தப்பியோடிள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த விஜயை அருகில் இருந்தவர்கள், மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து மருத்துவர்கள் விஜய்  உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சரணடைந்த சிறுவன்

இது தொடர்பாக தகவலறிந்த விருத்தாசலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு, தப்பியோடிய சிறுவனை பல்வேறு இடங்களில் தேடிக் கொண்டிருந்தனர். ஆனால் கொலை நடந்த அடுத்த ஒரு மணி நேரத்திற்கு பின்பு,  சிறுவன் நவீன் தானாகவே முன்வந்து, விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.