சித்தாளுடன் வகுப்பறைக்குள் நுழைந்த கொத்தனார்...விடிந்தும் வெளியே வரவில்லை...என்ன நடந்திருக்கும்..?

பள்ளி வகுப்பறைக்குள் தூங்குவதற்காக சென்ற சித்தாளும், கொத்தனாரும் விடிந்தும் வெளியே வராததால் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சித்தாளுடன் வகுப்பறைக்குள்  நுழைந்த கொத்தனார்...விடிந்தும் வெளியே வரவில்லை...என்ன நடந்திருக்கும்..?

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மாம்பழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மலர். இவர்  சித்தாள் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செங்கல்பட்டு பழைய பஸ் ஸ்டேண்டு அருகே இயங்கி வரும் தனியார் பள்ளியில் தற்போது கட்டிட விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணி காரணமாக  20க்கும் மேற்பட்டோர் அங்கேயே தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அதில் ஒருவராக மலரும் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடன் வேலை பார்ப்பவர்களுள் ஒருவர் தான் கரிகாலன். கொத்தனார் வேலை செய்யும் இவர் கட்டிட பணிகளில் மலருடன்  சேர்ந்துதான் வேலை பார்த்து வருகிறார்.

இதனையடுத்து நேற்று முன்தினம் பள்ளிக்கு விடுமுறை என்பதால், கட்டிட தொழிலாளர்கள் தங்களது வேலையை தொடங்கினர். அன்றைய தினம் இரவு வேலையை முடித்துவிட்டு எல்லோரும் படுப்பதற்காக சென்றபோது, மலரும் கரிகாலனும்  பள்ளி வகுப்பு அறைக்குள் தூங்க சென்றுள்ளனர். ஆனால், தூங்க சென்ற மலர் மறுநாள் காலை பத்து மணி வரையிலும் ரூமை விட்டு வெளியே வரவேயில்லை. இதனால், சந்தேகமடைந்த மற்ற பணியாளர்கள் மலர் தங்கியிருந்த கிளாஸ் ரூமுக்குள் சென்று பார்த்தபோது, அங்கு அவர் ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பணியாளர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் கட்டடத்தில் மலருடன் ஒன்றாக பணியாற்றியவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

விசாரணையில் மலருக்கும், மாம்பழப்பட்டு பகுதியை சேர்ந்த கரிகாலனுக்கும் 10 வருடமாகவே தகாத உறவு இருந்துள்ளதாகவும், இதற்கிடையில் மலருக்கு வேறு ஒருவருடன் தகாத உறவு ஏற்பட்டு, அதனால் நடந்த பிரச்சனையால் தான் மலரை கரிகாலன் கொன்றுவிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், காய்கறி வெட்டும் கத்தியால், மலரின் கழுத்தை அறுத்துள்ளதாகவும்,  சக பணியாளர்கள் அத்தனை பேரும் இங்கிருக்கும் நிலையில், கரிகாலன் மட்டும் தலைமறைவு ஆனது மேலும் எங்களுக்கு சந்தேகத்தை உறுதிபடுத்தி உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இந்த ஜோடிக்குள் கள்ளக்காதல் தகராறா? அல்லது கொடுக்கல் வாங்கல் பிரச்சனையா என்று உறுதியாக தெரியவில்லை என்றும், அவர் கைது செய்யபட்ட பிறகுதான் கொலைக்கான உண்மையான காரணம் என்னவென்று தெரிய வரும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.