சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பக்கத்து வீட்டுகாரர்...போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வந்த காமக்கொடூரன் அதிரடி கைது!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பக்கத்து வீட்டுகாரர்...போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வந்த  காமக்கொடூரன்  அதிரடி கைது!!

கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் பள்ளிக்கல் பகுதியில் வசித்து வந்தவர் மிதுன். இவர் கடந்த ஆண்டு  நவம்பர் 30-ம் தேதியன்று பக்கத்துவீட்டில் இருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் வழி தாங்காத சிறுமி சத்தம் எழுப்பவே மிதுன்  அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

பின்னர் இது குறித்து தகவலறிந்த போலீசார் மிதின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். ஆனால் மிதுன் கடந்து இரண்டு மாதங்களாகவே  தலைமறைவாகவே இருந்து போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்தார்.

இந்நிலையில், கொல்லம் மாவட்டதில் உள்ள பரிப்பள்ளியில் மிதுன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த மிதுனை சுற்றிவளைத்து கையும் களவுமாக கைது செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மிதுன் போக்சோ சட்டத்தில் கீழ்  சிறையில் அடைக்கப்பட்டார்.