கள்ள உறவில் ஈடுபட்ட மகள்,.சொல்ல சொல்ல கேட்காததால் தந்தையே அரிவாளால் வெட்டிய கொடூரம்.! 

கள்ள உறவில் ஈடுபட்ட மகள்,.சொல்ல சொல்ல கேட்காததால் தந்தையே அரிவாளால் வெட்டிய கொடூரம்.! 

நெல்லையில் தவறான உறவில் ஈடுபட்டு வந்த மகளை, அவரது தந்தையே அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை மாவட்டம் கிருஷ்ணபேரி பகுதியை சேர்ந்தவர் சேர்மதுரை. கூலி தொழிலாளியான இவருக்கு இசக்கி கவிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் இசக்கி கவிதாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த  ராமச்சந்திரன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

இதுகுறித்து அறிந்த இசக்கி கவிதாவின் தந்தை, இந்த பழக்கத்தை கைவிடுமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால் இசக்கி கவிதா அதை கேட்காமல் தொடர்ந்து, ராமச்சந்திரனுடன் பழக்கம் வைத்திருந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த இசக்கி கவிதாவின் தந்தை, இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடி விட்டார்.  படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இசக்கி கவிதாவின் கணவர் சேர்மதுரையை கைது செய்த போலீசார், தப்பியோடிய தந்தை உள்பட இருவரை தேடி வருகின்றனர்.