ஏ.டி.எம்.மில் கள்ளநோட்டுக்கள் டெபாசிட்... அறந்தாங்கியில்  போலீஸ் விசாரணை...

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பேங்க் ஆஃப் பரோடா வங்கி ஏடிஎம்மில் கள்ள நோட்டுக்கள் டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.டி.எம்.மில் கள்ளநோட்டுக்கள் டெபாசிட்... அறந்தாங்கியில்  போலீஸ் விசாரணை...
அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவர்கள் ரேவதி மற்றும் சரவணன் தம்பதி. இதில், ரேவதி  பேங்க் ஆஃப் பரோடா வங்கியில்  கணக்கு வைத்துள்ளார்.  கடந்த 19 ஆம் தேதி, அறந்தாங்கியில் உள்ள ஏ.டி.எம் மூலம் அவரது கணக்கில் 60 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து பணத்தை எடுத்து பார்த்த போது அவை கள்ளநோட்டுகள் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து சிசிடிவி காட்சியின் அடிப்படையில், வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் கள்ளநோட்டுகள் எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து சரவணனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.